Published on 10/09/2020 | Edited on 10/09/2020
அண்மையில் தி.மு.க விலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் எந்த விசாரணையும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
கட்சி விதிகளின்படி உறுப்பினரை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதுவே செல்லும் என எம்.எல்.ஏ., கு.க.செல்வம் தரப்பு வாதிட்ட நிலையில் தி.மு.க தலைவர், பொதுச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.