Skip to main content

கட்சியே இல்லாத வேட்பாளருக்கா உங்கள் ஓட்டு! திமுக எம்.எல்.ஏ.வின் பிரச்சாரம்!!

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி களமிறங்கியிருக்கிறார். வேலுச்சாமி ஆதரித்து ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு வேட்பாளர் வேலுச்சாமியை அழைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

 

அப்போது  வாக்காள மக்கள் வேலுச்சாமிக்கும். சக்கரபாணிக்கும் மாலை, சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அப்போது விருப்பாட்சியில்  வாக்காள மக்களிடம்  பேசிய மேற்கு மாவட்டச் செயலாளரும்.சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணியோ....

 

mla

 

 

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கக்கூடிய தேர்தல். அதனால் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் ஐம்பது ரூபாய்க்கு இருந்த கேபிள் டிவி கட்டணம் 350 ரூபாயாக உயர்த்தி விட்டனர். அதுபோல் 350 ரூபாய் இருந்த கேஸ் விலை  ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டனர். அதுபோல் ஒரே நாள் இரவில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என  இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களையும் தவிக்க வைத்து விட்டார். அதுபோல் ஒவ்வொருத்தருக்கும் 15 லட்சம் ரூபாய் உங்களுடைய வங்கிக் கணக்கில் போடுகிறேன் என்று சொன்ன மோடி இதுவரை 15 ரூபாய் கூட போடவில்லை.

 

 

இப்படி மத்திய அரசும், மாநில அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த தேர்தல் மூலம் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியும் மக்களுக்காக தேர்தல் அறிக்கை மூலம் பல திட்டங்களையும், சலுகைகளையும் கூறியிருக்கிறார்கள். அதில் முக்கியமானது நம்ம பிள்ளைகள் இனிமேல் நீட் தேர்வு எழுதத் தேவையில்லை, நீட் தேர்வை ரத்து செய்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். அதுபோல் கல்விக்கடன் பயிர்க்கடன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் அதோடு வருடத்திற்கு தாய்மார்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் அதாவது மாதம் இரண்டு ஆயிரம்ரூபாய் உதவித் தொகை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் .

 

mla

 

100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்பட்டு 300 ரூபாயாக கூலி தர இருக்கிறார்கள். இப்படி பல சலுகைகள் வாக்காளமக்களாகிய உங்களுக்கு அறிவித்து இருக்கிறார்கள். அதுபோல் இப்பகுதியில் பல ஆயிரம் பேர்களுக்கு நான் கொடுத்து முதியோர் தொகையை நிறுத்திவிட்டார்கள். அந்த முதியோர் உதவி தொகை எல்லாம் மீண்டும் உங்களுக்கு வீடு தேடி கொடுக்கப்படும். 

 

 

அதற்காக தலைவர் தளபதி 60 வயதுக்கு மேற்பட்ட உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டம் கொண்டுவரப்போகிறார். அதனால் வரக்கூடிய தேர்தலில் வேட்பாளர் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். இந்த பகுதியில் போட்டி போடக்கூடிய  பாமக கட்சியே இல்லை, அப்படிப்பட்ட கட்சிக்கு நீங்கள் ஓட்டு போட்டால் அது வேஸ்டாக போய்விடும். அதனால் வெற்றி பெறும் வேட்பாளரான வேலுச்சாமிக்கு உங்கள் ஓட்டுகளை போட்டு பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.

 

 

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, கண்ணன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.