Skip to main content

கட்சியே இல்லாத வேட்பாளருக்கா உங்கள் ஓட்டு! திமுக எம்.எல்.ஏ.வின் பிரச்சாரம்!!

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி களமிறங்கியிருக்கிறார். வேலுச்சாமி ஆதரித்து ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு வேட்பாளர் வேலுச்சாமியை அழைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

 

அப்போது  வாக்காள மக்கள் வேலுச்சாமிக்கும். சக்கரபாணிக்கும் மாலை, சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அப்போது விருப்பாட்சியில்  வாக்காள மக்களிடம்  பேசிய மேற்கு மாவட்டச் செயலாளரும்.சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணியோ....

 

mla

 

 

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கக்கூடிய தேர்தல். அதனால் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் ஐம்பது ரூபாய்க்கு இருந்த கேபிள் டிவி கட்டணம் 350 ரூபாயாக உயர்த்தி விட்டனர். அதுபோல் 350 ரூபாய் இருந்த கேஸ் விலை  ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டனர். அதுபோல் ஒரே நாள் இரவில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என  இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களையும் தவிக்க வைத்து விட்டார். அதுபோல் ஒவ்வொருத்தருக்கும் 15 லட்சம் ரூபாய் உங்களுடைய வங்கிக் கணக்கில் போடுகிறேன் என்று சொன்ன மோடி இதுவரை 15 ரூபாய் கூட போடவில்லை.

 

 

இப்படி மத்திய அரசும், மாநில அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த தேர்தல் மூலம் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியும் மக்களுக்காக தேர்தல் அறிக்கை மூலம் பல திட்டங்களையும், சலுகைகளையும் கூறியிருக்கிறார்கள். அதில் முக்கியமானது நம்ம பிள்ளைகள் இனிமேல் நீட் தேர்வு எழுதத் தேவையில்லை, நீட் தேர்வை ரத்து செய்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். அதுபோல் கல்விக்கடன் பயிர்க்கடன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் அதோடு வருடத்திற்கு தாய்மார்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் அதாவது மாதம் இரண்டு ஆயிரம்ரூபாய் உதவித் தொகை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் .

 

mla

 

100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்பட்டு 300 ரூபாயாக கூலி தர இருக்கிறார்கள். இப்படி பல சலுகைகள் வாக்காளமக்களாகிய உங்களுக்கு அறிவித்து இருக்கிறார்கள். அதுபோல் இப்பகுதியில் பல ஆயிரம் பேர்களுக்கு நான் கொடுத்து முதியோர் தொகையை நிறுத்திவிட்டார்கள். அந்த முதியோர் உதவி தொகை எல்லாம் மீண்டும் உங்களுக்கு வீடு தேடி கொடுக்கப்படும். 

 

 

அதற்காக தலைவர் தளபதி 60 வயதுக்கு மேற்பட்ட உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டம் கொண்டுவரப்போகிறார். அதனால் வரக்கூடிய தேர்தலில் வேட்பாளர் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். இந்த பகுதியில் போட்டி போடக்கூடிய  பாமக கட்சியே இல்லை, அப்படிப்பட்ட கட்சிக்கு நீங்கள் ஓட்டு போட்டால் அது வேஸ்டாக போய்விடும். அதனால் வெற்றி பெறும் வேட்பாளரான வேலுச்சாமிக்கு உங்கள் ஓட்டுகளை போட்டு பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.

 

 

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, கண்ணன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்