Skip to main content

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த திமுக எம்.எல்.ஏவும், காங்கிரஸ் எம்.பியும் !

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

உலகம் முழுவதும் கரோனோ வைரஸ் அச்சுறுத்தலில் மரண பயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், சிகிச்சைக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முழுமூச்சாக செய்துவருகிறது என்று ஆளும் கட்சியின் சார்பில் பத்திரிகைகளுக்கு பேட்டிக்கொடுப்பது மற்றும் நிவாரண உதவிகள் வழங்கிக்கொண்டிருந்தனர்.

 

 DMK MLA and Congress MP inspecting state hospital!


இந்தநிலையில் திமுக எம்.எல்.ஏவும் கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தன்னுடைய நிதியில் இருந்து ஒருகோடி ரூபாய் கொடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தீடீர் என கரூர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கரூர் எம்.பி., ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நோயாளிகள், துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கினார். தொடர்ந்து, மருத்துவமனை டீன் ரோஸி வெண்ணிலாவிடம் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், எம்.பி., ஜோதிமணி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 500 படுக்கைகள் கொண்ட தனிமைப் படுத்தப்பட்ட கரோனா சிகிச்சை வார்டை ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையளிக்க தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு, எம்.பி, நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கப்படும் என்றார்.

 

 DMK MLA and Congress MP inspecting state hospital!


எம்.எல்.ஏ.,செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜர் மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு பதிலாக தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில், காய்கறி விற்பனையாளர்களிடமிருந்து, 400 முதல், 500 ரூபாய் வரை ஏலதாரர் சுங்கம் வசூலிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த ஏலதாரர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், முதியோர், தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் உணவு வேண்டும் என்றால், 94422 53345, 94422 39911 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆளும் கட்சியனரே மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்துவருவது போன்று உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் எம்.பியும் சேர்ந்து அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து தேவையான பொருட்களின் பட்டியலை கேட்டு பெற்றது மக்களின் சோதனை காலங்களில் கட்சி பேதம் இன்றி அனைத்து கட்சியினரும் களத்தில் இறங்கியிருப்பது ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கிறது என்கிறார்கள் கரூர் கட்சியினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.