பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக ஆளுநரை சந்தித்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். ஸ்டாலினுடன் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களும் ராஜபவனுக்கு சென்றுள்ளனர்.
இந்த சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை மீது 97 பக்கங்களைக் கொண்ட ஊழல் புகார் கடிதத்தை ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.