Skip to main content

"திமுக இருக்கும் வரை தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முடியாது" - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

dmk minister i periyasamy talks about hindi imposition

 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பேசும்போது, "தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவற்றை உலகறியச் செய்தது நமது தாய்மொழியான தமிழ் மொழி தான். இந்த தமிழ் மொழியை நாம் போற்ற வேண்டும்.‌ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே  பிராந்திய மொழிகளில் வாதாடவும் தீர்ப்பு வழங்கவும் வேண்டும் எனக் கூறியதால் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்பதற்கு இதுவே சான்று.

 

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமப்புறச் சாலைகள் எதுவும் முழுவதுமாக அமையவில்லை. ஆனால் தற்போது தமிழக முதல்வர் இந்த வருடத்தில் பத்தாயிரம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கென தனித் துறையை உருவாக்கியவர் கலைஞர். தமிழுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது அதேபோல் திமுக இருக்கும் வரை தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முடியாது.தமிழுக்குத் தனித் துறையை உருவாக்கி அதற்கு ஒரு அமைச்சரையும் நியமித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர். இந்தியாவை பாஜக 8 வருடங்களாக ஆண்டு வருகிறது ஆனால் விலைவாசி உயர்வைத் தவிர வேறொன்றும் செய்ததில்லை கேஸ், பெட்ரோல் போன்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி கூறினார். ஆனால் தற்போது வரை இந்தியாவில் 12 கோடி பேர் தமது வேலைகளை இழந்து உள்ளனர்.

 

இந்தியாவில் தமிழகத்தில் தான் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தனர். தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் கட்டிட வசதி இல்லாமல் இடியும் தருவாயில் இருப்பதால் தமிழக முதலமைச்சர் இதனை உணர்ந்து நமது கிராம குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக சுமார் 800 கோடி அளவில் தொடக்கப் பள்ளிகளின் கட்டிடங்களைக் கட்ட நிதியை ஒதுக்கி உள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு செய்வதற்காக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு கடந்த திமுக ஆட்சியில் தான் பட்டாவே கொடுத்தோம். அதுபோல் திருச்செந்தூர் கோவிலுக்கும் பட்டா கொடுத்திருக்கிறோம். திண்டுக்கல் மாநகரில் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம் அதுபோல் கூடிய விரைவில் காவிரியில் இருந்து கூட்டு குடிநீர் திட்ட மூலம் கூடுதல் தண்ணீரும் திண்டுக்கல் நகருக்கு கொண்டு வர இருக்கிறோம் அது போல் வைகை டேமிலிருந்தும் இருந்தும் திண்டுக்கல் மாநகருக்கு குடிநீர் கொண்டு வர இருப்பதால் திண்டுக்கல் மாநகரில் குடிநீர் பிரச்சனையே இல்லாத அளவுக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரப்படும்" என்று கூறினார்.

 

கூட்டத்துக்கு மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேயர் இளமதி. துணை மேயர் ராஜப்பா. மாவட்ட துணை செயலாளர் நாகராஜ். வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ஜெயின் .ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன். மற்றும் மாநகர பகுதி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.