Skip to main content

பேரூராட்சி மன்ற கூட்டத்தில் செயல் அலுவலரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

வ

 

சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்றுப் பேசினார். முதன்மை உதவியாளர் சசிக்குமார் தீர்மான நகலை வாசித்தார். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. பிறப்பு, இறப்பு தீர்மானம் மற்றும் நிதியிருப்பு தீர்மானம் வாசித்த பின்பு 5வது தீர்மானமாகப் பொதுநிதியின் கீழ் வடிகால் சிறுபாலங்கள், பேரூராட்சி அலுவலகத்திற்கு வர்ணம் பூசுதல், நவீன கழிப்பறையை மராமத்து செய்தல், சிக்கனம்பட்டி அங்கன்வாடி மையத்தைப் பழுது நீக்கம் செய்தல் தீர்மானம் வந்தபோது ஒட்டுமொத்தமாக அனைத்து கவுன்சிலர்களும் பேருந்து நிலைய கழிப்பறை மராமத்து பணிக்கு 8 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

அப்போது நடந்த விவாதங்களில்  திமுக வார்டு உறுப்பினர் ஜெயகிருஷ்ணனோ, " கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் 80 ஆயிரம் செலவு செய்து கழிப்பறையைப் பராமரித்தார்கள். இப்போது அதே கழிப்பறையைப் பராமரிக்க 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். புதிதாகக் கட்டிடம் கட்டினாலே 8 லட்சம் செலவாகாது. பேரூராட்சி பொறியாளர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு நாங்கள் உடன்பட மாட்டோம். ஒரு லட்சம் கொடுத்தால் நான் கழிப்பறையில் பராமரிப்பு பணிகளைச் செய்து காட்டுகிறேன் என்றார். அதற்குச் செயல் அலுவலரோ, பொறியாளர்கள் சொன்னதை வைத்துத்தான் மதிப்பீடு போட்டுள்ளோம்" என்றார்.

 

அதற்கு தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் கடந்த நான்கு மாதமாகப் பேரூராட்சி மன்றம் மூலம் 55 புதிய வீடுகள் கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வழங்கி உள்ளீர்கள். இதுகுறித்து  அந்த வார்டு உறுப்பினருக்கு எந்த தகவலும் நீங்கள் தெரிவிப்பதில்லை. அப்ரூவல் வாங்கியவர்கள் வீட்டைக் கட்டிவிட்டு தெருவில் வாசற்படியைக் கட்டுகிறார்கள். இதனால் தெருக்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது என்றனர். அதற்கு செயல் அலுவலர் நந்தகுமார்,  பிளான் அப்ரூவல் குறித்து வார்டு உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றவுடன், அனைத்து கவுன்சிலர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது,

 

ராஜு (திமுக) : வார்டில் உள்ள பூங்காவில் திமுக கவுன்சிலர் ஆக்கிரமிப்பு செய்கிறார் என்று அதிகாரிகள் கூட்டமாக வந்து ஆக்கிரமிப்பை அகற்றினீர்கள். ஆனால் பூங்காவிற் கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனி நபர் பூச்செடிகளை நட்டு விவசாயம் செய்து வருகிறார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதுபோல பூங்கா அருகே வீடு கட்டுபவர்கள் பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கட்டி வருகின்றனர். அதற்கு தனியாகப் பேரூராட்சி பணியாளர்கள் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்.

 

ராஜசேகர், (தி.மு.க.): கடந்த மூன்று மாதமாக சின்னாளபட்டி நகர மக்களுக்கு குடிதண்ணீர் எவ்வித சுத்தமும் இல்லாமல் அசுத்தமாக விநியோகம் செய்கிறீர்கள். கேட்டால் பைப் உடைந்துவிட்டது. அதன் வழியாகக் கழிவுநீர் கலந்து விட்டது என்கிறீர்கள். பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்குவதைத் தவிர வேறு உங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. பொது மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.

 

செயல் அலுவலர் -  இனி முறையாக சுத்தமான குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

சாந்தி கணேசன் (திமுக) : வார்டுகளில் சுத்தம் செய்ய வருபவர்கள் பிளீச்சிங் பவுடரோ, பினாயிலோ தெளிப்பது கிடையாது. கேட்டால் பேரூராட்சி நிர்வாகம் வாங்கிக் கொடுக்கவில்லை எனத் துப்புரவுப் பணியாளர்கள் சொல்கிறார்கள். 

 

செயல் அலுவலர்: டென்டர் விட்டாச்சு, விரைவில் பொருட்கள் விநியோகம் ஆகும்.

 

ஜெயகிருஷ்ணன் (திமுக) : பேரூராட்சி அலுவலகம் முழுவதும் ஒப்பந்தக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்சி தொண்டர்களோ, வார்டு உறுப்பினர்களோ பேரூராட்சி அலுவலகம் வந்தால் ஒப்பந்தக்காரர்கள் விரட்டுகிறார்கள். இனி பணி செய்யும் இடத்தைத் தவிர ஒப்பந்தக்காரர்கள் அலுவலகத்திலேயே முகாமிட்டால் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம். முடிந்தால் பேருந்து மறியல் செய்வோம்.

 

செயல் அலுவலர் : ஒப்பந்ததாரர்களிடம் இனி பேசி குறிப்பிட்ட நேரத்தில் வரும்படி சொல்கிறேன்.

 

செல்வக்குமாரி (திமுக) : இதுவரை நான்கு முறை கூட்டம் நடத்தி டெண்டர் விட்டீர்கள். பொதுநிதியிலிருந்து கழிப்பறையைப் பராமரிக்க, அங்கன்வாடியைப் புதுப்பிக்க, அலுவலகத்திற்கு வர்ணம் பூச அனுமதி கேட்கிறீர்கள். இதற்கெல்லாம் செலவு செய்ய பொதுநிதி இருக்கும். பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய தரைப்பாலம், வடிகால் கட்டுவதற்குக் கேட்டால் பணம் இல்லை என்று கூறுகிறீர்கள். வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி சொல்லக்கூட தெருப்பக்கம் செல்லமுடியவில்லை, எனது வார்டு பகுதியில் உள்ள அனைத்து தரைப்பாலங்களையும் சீரமைக்க வேண்டும்.

 

விவாதம் நடந்து  கொண்டிருக்கும்போது செலவின சீட்டுக்களைப் பார்வையிட்ட பின்பும், யார் யாருக்கு யார் மூலம் வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வழங்கப்பட்டது என்று தெரியாமல் 6வது தீர்மானத்தை வாசித்தபோது தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வேல் விழி, செல்வக்குமாரி, தாமரைச்செல்வி, காமாட்சி, ராஜாத்தி, சாந்தி, ராசு, ஹேமா, லட்சுமிகுமர கண்ணன், சாந்தி உட்பட 10 தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தனர். 

 

மொத்தம் 18 தி.மு.க. வார்டு உறுப்பினர்களில் 10 பேர் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் தனி அலுவலர் காலத்தில் நடந்தது போல் இப்போதும் தங்கள் இஷ்டம் போல் செயல்படுவதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.