Advertisment

மின் கட்டண உயர்வைக் கண்டித்து 21ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

jkl

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதையும் தாண்டி வட மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் கரோனா பாதிப்பு மற்றும் மின் கட்டண உயர்வு பற்றி விவாதிப்பதற்காக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று ஸ்டாலின் தலைமையில் காணொளிகாட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. முன்னணித் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். அதில் மின் கட்டண உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. அரசு தொடர்ந்து மின் கட்டண விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதால் அதனைக் கண்டித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வருகின்ற 21ஆம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

electicity
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe