சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், க.கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட 21 பேர் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே ரேஷன் உள்ளிட்ட மத்திய அரசின் முடிவை கண்டித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் செப்டம்பர் 20- இல் போராட்டம் நடத்துவது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.