Skip to main content

மக்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்த திமுக பிரமுகர்கள்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
fg



கரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் இந்தியா முழுவதும் போடப்பட்ட 144 தடை உத்தரவால் நாடே முடங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள், ஏழை மக்கள் என பல தரப்பினரும் வேலையில்லாததால், வருமானம் இன்றி, உணவுக்கு வழியில்லாமல் தவித்தனர். மக்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு உதவ திமுக களமிறங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி, மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உதவிகள் செய்ய துவங்கினர். அதனை ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தின் கீழ் ஒரு கைபேசி எண்ணை மக்களுக்கு தந்து, உதவி வேண்டுவோர் தொடர்பு கொண்டால் உதவிகள் தேடிவரும் என்றனர்.


தொலைபேசி வழியாக உதவி பொருட்கள் கேட்டவர்களுக்கு மளிகை பொருட்களும், ஆதரவற்றவர்களுக்கு உணவுகளும் வழங்கினர். இந்நிலையில் தொலைபேசி வாயிலாகவும், ஒன்றிணைவோம் வா என்கிற திமுக திட்டத்தின் இணையத்தில் பொதுமக்கள் அரசு உதவி வேண்டி கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கைகள் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடிந்தவையாக இருந்தன. இரண்டு வாரத்துக்கு முன்பு பொதுமக்கள் அனுப்பிவைத்த மனுக்களில் 1 லட்சம் மனுக்களை தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்தித்து திமுக எம்.பிக்கள் குழு வழங்கியது. தற்போது இரண்டாவது கட்டமாக தங்களிடம் வந்துயிருந்த 6,23,914 கோரிக்கை மனுக்களை முதலமைச்சரின் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளன்ர்.

 

 

h



அதேபோல் திமுக மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் இந்த மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மே 29ந் தேதி தந்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மனுக்களை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், ஆட்சித்தலைவர் கந்தசாமியிடம் வழங்கினார்கள். இராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட மனுக்களை இராணிப்பேட்டை காந்தி எம்.எல்.ஏ தலைமையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்கன் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று வழங்கினர்.


திமுகவிடம் வந்துள்ள மனுக்கள், அரசிடம் வழங்கிய மனுக்களின் விவரங்கள் அனைத்தும் www.ondrinaivomvaa.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக 18 லட்சம் உதவி அழைப்புகள் வந்தன, அதில் முதல் கட்டமாக ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களையும், தற்போது 6.20 லட்சம் கோரிக்கை மனுக்களை அரசிடம் வழங்கியது திமுக. மீதி 11 லட்சம் அழைப்புகள், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் கேட்டு வந்த உதவி அழைப்புகள், அப்படி உதவி கேட்டவர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது என்கிறது திமுக தரப்பு.

அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும் என்கிற கோரிக்கை மனுக்களையே, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது திமுக. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும், எங்களை நம்பி இவ்வளவு கோரிக்கை மனுக்கள் வந்துள்ளது, தமிழக மக்கள் பெருந்துயரத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும். இந்த மனுக்களை அரசிடம் தந்துள்ளோம், அதன் மீது நடவடிக்கை எடுக்கவைக்க திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தொடர்ந்து முயற்சி செய்வார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.