Skip to main content

கிரண்பேடி மூலமாக புதுச்சேரியில் பாஜக கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர நினைப்பதை அனுமதிக்க முடியாது"- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Published on 17/02/2019 | Edited on 17/02/2019

புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும்,  அவருக்கு ஆதரவாக பாரபட்சத்துடன் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் மற்றும் 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 13-ஆம் தேதி முதல் அமைச்சர் நாராயணசாமி,  அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ்- திமுக எம்எல்ஏக்கள்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

DMK leader MK Stalin interview in puducherry!!

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமி  உள்ளிட்டவர்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  மு.க.ஸ்டாலின், 

" புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் உள்ள கிரண்பேடி மக்களுக்கான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். திகார் சிறைச்சாலை போல புதுச்சேரி மாநிலத்தை போலீஸ் ராஜ்யமாக நடத்த நினைக்கிறார் கிரண்பேடி. புதுச்சேரியின் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் கிரன்பேடி.  அவருக்கு  ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடியும் இவ்விவகாரத்தில் கண்டும் காணாமல் இருப்பது தவறு,  உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.  கிரண்பேடியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநிலத்தின் உரிமையை பறிப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பது போன்றது" என்றாார்.

 

DMK leader MK Stalin interview in puducherry!!

 

இதனைடையே டெல்லிக்கு சென்றிருந்த  கிரண்பேடி வருகிற 21-ஆம் தேதி தான் புதுச்சேரிக்கு வருவதாகவும்,  அன்று முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று திடீரென டெல்லியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்துள்ளார் கிரண்பேடி.  மேலும் இன்று மாலை ஆறு மணிக்கு பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.  அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமி 'ஆளுநர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. இன்று மாலை 6 மணிக்கு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருக்கிறோம்.  அப்போது புதுச்சேரி மக்களின் பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்படும்.  அதேசமயம் பேச்சுவார்த்தையில் தலைமைச் செயலாளர்,  மற்றும் துறை செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.