Skip to main content

வெற்றியை அறிவிக்கவிடாமல் செய்த ஆளும்கட்சி – தேர்தல் ஆணைய கதவை தட்டிய திமுக

Published on 12/01/2020 | Edited on 12/01/2020

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம் ஒன்றியத்தில் மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் ஜனவரி 11ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் அலுவலர் முன்பு ஜனவரி 11ந்தேதி காலை ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக சார்பில் சுந்தரபாண்டியன் என்பவரும், அதிமுக சார்பில் ரமேஷ் என்பவரும் போட்டியிட்டனர்.

இதில் சுந்தரபாண்டியன் 10 கவுன்சிலர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். ரமேஷ் தோல்வியை சந்தித்தார். தேர்தல் நடைபெற்றது தொடர்பாக ஒன்றிய குழு தீர்மான புத்தகத்தில் தீர்மானம் இயற்றி தேர்தல் அலுவலர் கையெழுத்திட்டார். தேர்தலில் வாக்களித்த 15 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டனர், தோல்வியை சந்தித்த அதிமுக வேட்பாளர் ரமேஷ் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு முடித்தனர்.

 

gg


இதுப்பற்றி திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரும், புதுப்பாளையம் சேர்மன் சுந்தரபாண்டியன் என செய்தியாளர்களுக்கு தகவல் அனுப்பினார். இந்நிலையில் திடீரென புதுப்பாளையம் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தரப்பில் இருந்து மாலை தகவல் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதுப்பற்றி புதுப்பாளையம் திமுக தரப்பு கவுன்சிலர்கள், கட்சி வழக்கறிஞர்கள் பழனி, புகழேந்தி, மனோகரனுடன் சென்று ஆவணங்களை காட்டி முறையிட்டனர். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் எனச்சொல்லியுள்ளார்.

இதுப்பற்றி திமுக மா.செவான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் முறையாக நடைபெற்று மினிட் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அதன் நகல். இந்நிலையில், ஆளும்கட்சியான அதிமுக தரப்பில் இருந்து தேர்தல் நடத்திய அலுவலரிடம், புதுப்பாளையம் தேர்தல் முறைகேடு எனச்சொல்லி ரத்து செய்ய வேண்டும்மென மிரட்டியுள்ளனர். அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார், அவரை மிரட்டி தலைவர் யார் என்பதை அறிவிக்காமலும், சான்றிதழ் வழங்காமல் நிறுத்தியுள்ளனர் அதிகாரிகள்.

இதுப்பற்றி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கந்தசாமியிடம் எங்கள் கட்சி வழக்கறிஞர்கள், 10 கவுன்சிலர்களுடன் சென்று நியாயத்தை கேட்டுள்ளனர். அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் எனச்சொல்லியுள்ளார். இதுதொடர்பாக எங்கள் கட்சியின் மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி, மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து முறையிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதனை பொருத்துக்கொள்ள முடியாமல் ஆளும்கட்சியினர் அராஜகத்தில் ஈடுப்பட்டு கவுன்சிலர்கள் நியாயமான முறையில் வாக்களித்து வெற்றி பெறவைத்த திமுக சேர்மனை அறிவிக்காமல் செய்துள்ளார்கள். இது நியாயமா என மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

திமுக சார்பில் சேர்மன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சுந்தரபாண்டியன், திமுக மாவட்ட துணை செயலாளராக உள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் கார் கண்ணாடியை இருகட்சி பிரச்சனையில் அடித்து உடைத்து எதிர்ப்புக்காட்டினார் சுந்தரபாண்டியன். இந்த மாவட்டத்தில் தன்னை எதிர்க்க யாரும்மில்லை என ஜம்பமாக வலம் வந்தவரின் கார் கண்ணாடியை அக்ரியன் பலமான கலசப்பாக்கம் தொகுதிக்குள் வைத்து அடித்து உடைத்து பயத்தை காட்டி ஓடவிட்டதால் அன்று முதல் இருவருக்கும் பகை. அக்ரி.கிருஷ்ணமூர்ததியின் மிரட்டலால் தான் 15 கவுன்சிலர்களில் 10 கவுன்சிலர்களின் ஆதரவில் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் வெற்றியை அறிவிக்கவிடாமல் செய்துள்ளார் என்கிறார்கள்.

அதுமட்டும்மல்ல புதுப்பாளையம் ஒன்றியத்தில் வன்னியர், உடையார் செல்வாக்கு அதிகம். அந்த புதுப்பாளையம் ஒன்றியம் தற்போது பொதுப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அந்தயிடத்தில் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் எப்படி ஒன்றிய சேர்மனாகலாம் என்பது அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் கோபம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.