''இத்தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன்''-சென்னை தினத்திற்கு கனிமொழி வாழ்த்து!

'' This is the person who recorded the pressure on the history of Chennai '' - Kanimozhi greetings for Chennai Day!

வருடந்தோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 382 வது சென்னை தினமாகும்.

இது தொடர்பாக தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி தனது வாழ்த்துச் செய்தியினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,'சென்னையை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சென்னைவாசிகளுக்கு 382 வது சென்னை தின வாழ்த்துகள். சென்னை தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமல்லாமல் கலைநகரமாகவும் திகழ்கிறது. சென்னை வரலாறு குறித்தும், கலாச்சார சிறப்பு குறித்தும் அழுத்தமாக பதிவு செய்தவர் சு.முத்தையா. சென்னை தினக் கொண்டாட்டத்தை முன்னெடுக்க செய்தவரும் சு.முத்தையாதான்என்பதை இத்தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன்' எனத்தெரிவித்துள்ளார்.

Chennai kanimozhi
இதையும் படியுங்கள்
Subscribe