Skip to main content

திமுக ஐடி விங் நிர்வாகி மீது இளம்பெண் குற்றச்சாட்டு... வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

மதுரை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பாச பிரபு திருமங்கலத்தைச் சேர்ந்த என்னுடன் நெருங்கிப்பழகி திமுகவில் பதவி வாங்கித் தருவதாக சொல்லி தன்னை பலமுறை ஏமாற்றி உள்ளார். அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினேன் தற்போது குடித்துவிட்டு வந்து என்னிடம் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.மேலும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்து என் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன் என்னை காப்பாற்றுங்கள் என்று அழுது கொண்டே வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அந்த இளம்பெண்.

 

dmk IT wing executive accused of teenager ... WhatsApp spreading video

 

அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, என் பெயர் சுகன்யா திருமங்கலத்தில் இருக்கிறேன். என்னுடைய பெரியப்பா தனுஷ்கோடி பிரசிடென்டாக இருக்கிறார். நான் தேனியில் திருமணம் முடித்தேன். எனக்கும் என்னுடைய கணவருக்கும் சண்டை ஏற்பட்டு டிவர்ஸ் வரை சென்றது. அப்போது திமுகவின் ஐடி விங் கோஆர்டினேட்டர் பிரபுவுடன் நட்பு ஏற்ப்பட்டது. எனக்கு திமுகவில் பதவி வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார். இதுபற்றி கேட்டால் நாம் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் போட்டுடுவேன் என மிரட்டினார். அதேபோல் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டார். இதனால் எனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு என் தம்பியும், பெரியப்பாவும் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். எனக்கு என்ன நேர்ந்தாலும் முழு காரணம் பிரபுதான் என கூறினார்.
 

dmk IT wing executive accused of teenager ... WhatsApp spreading video

 

இதுகுறித்து மதுரை திமுக ஐடி விங் கோ-ஆர்டினேட்டர் பிரபுவை தொடர்புகொண்டு பேசியபோது, நானும் அவரும் நல்ல நட்பில் இருந்தோம், செல்பி எடுத்தோம் யாரோ ஒருத்தன் படத்தை ஃபேஸ்புக்கில்போட்டுவிட்டான். இதனால் அந்த பெண்ணுடைய தம்பியும் பெரியப்பாவும் அவரை அடித்து விட்டார்கள். அவரை அடித்தவுடன் அவர் ஹாஸ்பிடலில் போய் சேர்ந்து விட்டார். இந்தநிலையில் என்னை பிடிக்காதவர்கள்இரண்டு மூன்று பேர் போன் பண்ணி  என்னைப்பற்றி தவறாக அவரிடம் கூறியுள்ளனர். அதன்பிறகு அந்த பொண்ணு தற்பொழுது இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. தீபாவளி அன்று மதியம் சென்று பார்த்த பொழுது எனக்கு இந்த வீடியோ வெளியானது எல்லாம் தெரியாது. அப்போது கேட்டதற்கு என்னை என் தம்பி பெரியப்பாவுடன் சேர்த்து வையுங்கள் என்றார். நானும் எங்களுக்குள் ஏதும் தப்பான உறவு எதுவுமில்லை செல்பி எடுத்தது வெறும் நட்புதான் என்று கூறியவுடன் அவர்கள் அந்த பெண்ணை ஏற்றுக்கொண்டார்கள். அந்த பிரச்சினை அதோடு முடிந்துவிட்டது என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.