Skip to main content

பேக்கரி பெண்ணிடம் அத்துமீறல்... திமுகவினரை அடித்துத் துவைத்த கிராம மக்கள்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

dmk incident in thiruvarur

 

தஞ்சாவூரில் பேக்கரியோடு உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகிகள் பேக்கரியை சூரையாடப் பொதுமக்கள் திமுகவினரை அடித்து துவைத்து படுக்க வைத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர திமுக இளைஞரணி  செயலாளர் சுதாகர், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாண்டவர், மாணவரணி துணை செயலாளர் முருகேசன் உள்பட 8 பேர் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று கறி விருந்து சாப்பிட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே உள்ள ஒரு பேக்கரியுடன் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கச் சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்த பாட்டில்களை உருட்ட கடையிலிருந்த பெண் ரேவதி கேட்டதால் வாக்குவாதம் செய்து பணம் தராமல் போயிடுவோம் என்று பேசிக்கொண்டே கடை பெண் ஊழியரைத் தொட முயன்றுள்ளனர்.

 

அப்பொழுது பேக்கரியில் இருந்த உரிமையாளர் ஆனந்த மகன் வசந்த் ஆகியோர் என்ன பிரச்சனை என்று கேட்ட போது அவருடனும் தகராறில் ஈடுபட்டதால் உடனே மற்றொரு ஊழியர் கடை உரிமையாளர் சூரக்கோட்டை ஆனந்துக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வருவதற்குள் பேக்கரி சூரையாடப்பட்டு விட்டது. பேக்கரி உரிமையாளர் ஆனந்த் வரும் போதே கிராமத்தினர் பலரையும் அழைத்து வந்ததால் அவர்கள் பேக்கரியை உடைத்து தகராறில் ஈடுபட்ட மன்னார்குடி திமுக பிரமுகர்களை அடித்து உதைத்து யாரும் எழ முடியாத அளவுக்கு தாக்கி படுக்க வைத்துவிட்டனர். 8 பேரில் 2 பேர் ஓடி ஒழிந்து கொண்டதால் மீதமிருந்த 6 பேரும் படுகாயத்துடன் கிடந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

dmk incident in thiruvarur

 

அதேபோல திமுகவினர் தாக்கியதில் காயமடைந்த பேக்கரி ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கடை பெண் ஊழியர் ரேவதி, மன்னார்குடிக்காரர்கள் 6 பேர் மீதும் மன்னார்குடி பாண்டவர் கொடுத்த புகாரின் பேரில் பேக்கரி ஊழியர்கள் உள்பட 9 பேர் மீதும் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம். சமாதானமாக போகலாம் என்று மன்னார்குடி திமுக புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே மன்னார்குடி திமுகவினரோ.. திமுக தலைமை வரை தகவல் போய்விட்டதால் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியவர்களை நீக்கம் செய்யப் போகிறார்கள் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.