Skip to main content

‘நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக திறப்பு விழா காண்கிறது’ - செங்கோட்டையன் பேச்சு

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

 'DMK Inauguration sees the plans we have brought' - Sengottaiyan speech

 

அதிமுக சார்பாக 21 ஆம் தேதி ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 

“தமிழ்நாட்டில் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தார். 5 முறை ஜெயலலிதா முதல்வரானார். பிறகு இபிஎஸ் மாநிலத்தில் ஆட்சி செய்தார். அத்திக்கடவு - அவினாசி குடிநீர் திட்டம் உட்படப் பல நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்கினார். ஆனால், திமுக ஆட்சியில் எஸ்.ஜி.எப்.ஐ விளையாட்டுப் போட்டியில் கூட மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. மின் விநியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை. கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலை, சொத்து வரி, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மதுவின் மூலம் திமுகவுக்கு பல கோடி ரூபாய் தினசரி கிடைக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவின் ஊழலால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அதிமுக அபார வெற்றி பெறும்" என்றார்.

 

அடுத்து முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பேசும்போது, "தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தான் பிரதானமாக உள்ளது. ஆட்சியில் இருந்தவர்களுக்கு மது விற்பனை மூலம் மட்டும் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் சென்றது. அதிமுக ஆட்சியில் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டில் ஈரோடு-மேட்டுப்பாளையம் சாலை, ரூபாய் 900 கோடியில் ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஈரோடு ஜி.ஹெச்.யில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்