Skip to main content

அறிவிப்போடு நின்ற அதிமுக திட்டத்தை செயல்படுத்திய திமுக! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

DMK implements ADMK plan

 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நிலங்கள் வறட்சியாகவும் அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் தேவைகளுக்காக ஏராளமான பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வந்தனர்.

 

இந்நிலையில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், தற்போது தி.மு.க.வில் இருக்கும் அன்றைய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம் பதவியில் இருந்தபோது அறிவிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் திட்ட அறிவிப்போடு நின்றது. அதனைத் தாண்டி எதுவும் நடக்கவில்லை. தி.மு.க.ஆட்சி அமைந்ததும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் வேகமாக நடந்தன. 

 

பவானிசாகர் அணையிலிருந்து வரும் நீரானது கோபி அருகே உள்ள கொடிவேரி அனையிலிருந்து தண்ணீர் எடுத்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெருந்துறை பகுதிக்கு கொண்டு வருவது தான் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம். 

 

DMK implements ADMK plan

 

ரூபாய் 224 கோடி செலவில் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் மூலம் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், 547 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 4.49 லட்சம் மக்களுக்கு தினமும் 16.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையிலான இத்திட்டப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அதையடுத்து 12ந் தேதி காலை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். 


ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ, ஊராட்சி மன்ற தலைவர் நவமணி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 5.48 லட்சம் மக்களுக்கு 25.40 பில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க முடியும். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஏற்ப இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்க முடியும். 

 

இந்தத் திட்டத்தின் கீழ் கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கிணற்றில் இருந்து குடிநீரானது 29, 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரதான இயல்பு நீர் குழாய்கள் மூலம் திங்களூர் அருகே அமைக்கப்பட்டு உள்ள, 17.23 எம்.எல்.டி திறன் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த திட்டத்தின் மூலம் 4.49 லட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 16.40 மில்லியன் லிட்டர் அளவு தண்ணீர் வழங்கப்படும்.


மக்களின் குடிநீருக்கே வறண்ட பூமியாக இருந்த பெருந்துறை பகுதி தி.மு.க.ஆட்சியில் தாகம் தீர்த்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்