Skip to main content

"உழவர்களை கண்போல் பாதுகாக்கும் அரசு தான் தி.மு.க. அரசு"- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

"The DMK government is the government that protects the farmers" - Interview with Tamil Nadu Chief Minister MK Stalin!

 

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமின்றி சம்பா, தாளடி செய்திருந்த விவசாய நிலப்பரப்பிலும் மழைநீர் தேங்கி அழுகும் நிலையானது. டெல்டா மாவட்டங்களில் 50,000 ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்து வந்தனர்.

 

"The DMK government is the government that protects the farmers" - Interview with Tamil Nadu Chief Minister MK Stalin!

 

இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

 

இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்யப் போகிறார் என திடீரென அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/11/2021) பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் வழியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தவர். சீர்காழி அடுத்துள்ள கொள்ளிடம் அருகே உள்ள இருக்கூர் கிராமத்திற்கு வந்து, அந்த பகுதியில் மழையில் மூழ்கியிருந்த பயிர்களைப் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அங்கிருந்து தரங்கம்பாடிக்குச் சென்று பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.

 

"The DMK government is the government that protects the farmers" - Interview with Tamil Nadu Chief Minister MK Stalin!

 

அங்கிருந்து நாகை மாவட்டம் அடுத்துள்ள கருங்கண்ணி கிராமத்திற்கு வந்தவர், அங்கு மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த விவசாயிகளை சந்தித்துப் பேசினார். இது குறித்து விவசாயி வீரமணி என்பவரிடம் கேட்கும்போது,"வருடா வருடம் மழையால் அழிவதே எங்க நிலமையாகிடுச்சி, ஒவ்வொரு வருடமும் நடவு செய்து பயிரானபிறகே மூழ்கி அழுகும். இந்த வருடம் நடவு செய்த நாளில் இருந்தே மழை பெய்து மூழ்கடிச்சிடுச்சி" என கலங்கியபடி கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து, அருந்தவபுலம் கிராமத்திற்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை நீரில் சேதமடைந்த நெற்பயிர்களின் பாதிப்புகள் குறித்து அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை, அரிசி, உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், கனமழை காரணமாக வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்குப் பிரதம மந்திரி வீடு கட்டும்  திட்டத்தின் கீழ் ஆணையினையும் கையோடு வழங்கினார்.

 

அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தவர். கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவின் ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்துவிட்டு, பின்னர் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். அதோடு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு மனைபட்டா, கூரை வீடு பகுதி சேதம், கால்நடை இறப்பு, உள்ளிட்ட 12 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார்.

 

பின்னர் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கனமழை காரணமாக, தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை அறிந்திருப்பீர்கள். முதல்வராகிய நான், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

 

நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஆட்சிக்கு வந்த உடனே டெல்டா மாவட்டங்களில் 4,000 கி.மீ. தூர்வாரப்பட்டது. இதனால் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டது. உழவர்களைக் கண்போல் பாதுகாக்கும் அரசு தான் தி.மு.க. அரசு. கடந்த நான்கு மாதங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல் மீண்டும் நடக்கக் கூடாது என்கிற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

 

"The DMK government is the government that protects the farmers" - Interview with Tamil Nadu Chief Minister MK Stalin!

 

சென்னையில் இதுவரை 400 இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தி.மு.க. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகப் பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசு செயல் பட்ட விதத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ்நாடு அரசு நிரந்தர தீர்வை எடுத்துக் கொண்டு வருகிறது. சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு புவியியல் அமைப்பு தொடர்பான ஆய்வு செய்து அறிக்கை தரும்.

 

அதேபோல், டெல்டா மாவட்டங்களில் வெள்ள தடுப்பைத் தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களைப் பொறுத்த வரை தூர்வாரும் பணி நடைபெற்ற காரணத்தால் தான் பெருமளவு சேதம் தடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த வித பதிலும் இதுவரை வரவில்லை." இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.