விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கம் தென்னரசு, கருப்புச்சட்டை அணிந்து, தனது வீட்டின் முன்பாக ‘கரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம் என்ற வாசகம் அடங்கிய பதாகையைக் கையிலேந்தி, இன்றைய தினம் கட்சியினருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரோனா பாதிப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், மதுக்கடைகளைத் திறக்கும் அதிமுக அரசின் முடிவைக் கண்டித்து, கட்சியினருடன் இணைந்து முழக்கங்கள் எழுப்பினார்.