Skip to main content

அனைவருக்கும் பயிர் காப்பீட்டுத்தொகையை வழங்கிடு; கோட்டூரில் தி.மு.க. விவசாய அணி ஆர்ப்பாட்டம்

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

DMK farmers wing protest

 

 

திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகையை விடுபட்ட அனைவருவக்கும் உடனே வழங்கிட வேண்டும் என  முன்னாள் நாகை தி.மு.க. எம்.பி .கே.எஸ்விஜயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியின்போது ஆணைக்கொம்பன் நோய் தாக்குதலால் கடுமையாக சாகுபடி பாதிக்கப்பட்டு, பயிர்கள் நாசமாகின. இதனால் மகசூல் பெரும் இழப்பு ஏற்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகள்  பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். 

 

இந்நிலையில் 2019- 20 ஆண்டில் பயிர்காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கபட உள்ளது. அந்தப் பட்டியலில் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 29 வருவாய் கிராமங்கள் விடப்பட்டு, அந்த கிராமங்களில் உள்ள சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விடுப்பட்ட வருவாய் கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டுத்தொகையை உடனே வழங்கவேண்டும் என விவசாயிகள் கேட்டுவந்தனர். அதற்கு அதிகாரிகள் வட்டாரத்தில் எந்தவித பதிலும் இல்லை.

 

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் வோளாண்மை விரிவாக்கம் மையம் அலுவலகம் முன்பு தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளரும், முன்னாள் நாகை எம்.பியுமான .கே.எஸ்.விஜயன் தலைமையிலான தி.மு.கவினர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

ஆர்பாட்டத்தில் 2019-2020 ம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டினை மறு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும்  உடனடியாக வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரபடுத்துவோம்.  எனத் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து மாநில விவசாய அணி செயலாளர் .கே.எஸ் விஜயன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "கடந்த ஆண்டு ஆணைக்கொம்பன் நோய் புகுந்து மொத்த விவசாயத்தையும் பாழாக்கியது. இதனை மத்திய,மாநில அதிகாரிகளும் ஒட்டுமொத்த வேளாண்மை துறை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டுவிட்டு, பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை அரசுக்கு கூறி இழப்பீடு வழங்க வழிசெய்கிறோம் என்று கூறினர், இது அனைத்து பத்திரிகைகளிலும் வந்த உண்மை. அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்கூட பத்திரிகைகளில் வந்துள்ளது. அப்படி பெரும்பாதிப்புக்கு உள்ளாகிய பகுதிகளில் காப்பீடு செய்யப்பட்ட காப்பீட்டுத்தொகையைதான் நாங்கள் கேட்கிறோம். யாசகமாக கேட்கவில்லை. விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை கொடுக்க மறுத்தால் தி.மு.க தலைவரின் வழிகாட்டுதலோடு போராட்டத்தை மேலும் வலுவடைய செய்வோம்," என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.