Advertisment

அரக்கோணம் பாலியல் புகார்; திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது அதிரடி நடவடிக்கை!

DMK executive faces action on Arakkonam woman files complaint

அரக்கோணத்தில் தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயல் மீது பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல் தெய்வச்செயல், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வருவதாக அப்பெண் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Advertisment

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசெயல். காவனூர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். சும்மா இருபது வயசு பெண்கள் டார்கெட் பண்ணி லவ் டார்ச்சர் கொடுத்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் அவருடைய குறிக்கோள். ஐந்து வருடத்திற்கு ஒவ்வொரு 20 வயது பெண்களை தேடித் தேடி காதலித்து டார்ச்சர் செய்துள்ளார். இது எனக்கு தெரியாது. என்னை சுற்றி வழக்கு ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதைத் தெரிந்து கொண்டு வழக்கறிஞர் என சொல்லி என்னிடம் வந்து டார்ச்சர் செய்தார். திமுக கட்சியில் இருக்கிறேன். நீ என்னை கல்யாணம் செய்துகொள் இல்லையென்றால் உங்கள் அப்பா அம்மாவை கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டினார். எனக்கு யாருடைய சப்போர்ட்டும் கிடையாது. அப்பா அம்மா மட்டும்தான் எனக்கு சப்போர்ட். வேற யாருமே கிடையாது என தெரிந்துகொண்டு உள்ளே வந்து டெய்லியும் டார்ச்சர் செய்து கட்டாயமாக கல்யாணம் செய்தார். இந்த விஷயம் வெளியே போச்சுன்னா உன்னையும் உன் குடும்பத்தையும் துண்டுத் துண்டாக வெட்டிடுவேன். வரும் வழியிலேயே உன்னை காரை ஏற்றி கொலை செய்து விடுவேன். என்கிட்ட கார் இருக்கு என என்னென்னமோ பேசி மிரட்டினார். எல்லா ஆடியோவும் என்னிடம் இருக்கிறது” என்றார்.

Advertisment

அதேபோல் மற்றொரு பெண் அதிமுக நிர்வாகிகளிடம் குற்றச்சாட்டைத் தெரிவித்தார், “ஆமாம் நான் தப்பு செய்தேன் தான். ரிமாண்ட் பண்ணுங்க என சிரிச்சுகிட்டே சொல்றான் சார். என் வாழ்க்கையே போயிருச்சு. உடம்ப நாஸ்தி பண்ணிட்டான். படிப்பும் போயி இங்கு நிக்கிறேன். நீங்கதான் எங்களுக்கு நீதி வாங்கி தரணும். என்னிடம் மட்டுமல்ல 15 பெண்களிடம் இதுபோன்ற குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். இந்த பொண்ணுங்கள எல்லாம் அக்கா தங்கச்சியா நெனச்சு நீங்காத காப்பாத்தி தரணும்” வேதனையில் மன்றாடினர். இந்த சம்பவம் குறித்து, அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளும் திமுக அரசு மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல், திமுக நிர்வாகியால் கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வரும் 21 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில், தெய்வச்செயல் மீது திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த தெய்வசெயலை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். மேலும், அப்பொறுப்பு ம.கவியரசு என்பவரை நியமனம் செய்துள்ளார்.

sexual complaint complaint arakkonam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe