திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக திமுக செயல்வீரர்களின் ஆலோசனைக்கூட்டம் விரகனூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் டாக்டர் சரவணன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் B.ஈஸ்வரன், விரகனூர் ஊராட்சி செயலாளர் பா.சந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments