Skip to main content

முதல்வரே அடாவடித்தனம் செய்யலாமா? -  தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி!

Published on 20/08/2020 | Edited on 20/08/2020

 

 dmk - duraimurugan - questioning - edapadi palanisamy - cm

 

வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி வேலூர் வருகை புரிந்தார். இந்த அரசு நிகழ்வுக்கு தி.மு.க.வை சேர்ந்த சட்டமன்ற, நாடாளமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை. 

 

இதற்கு கண்டனம் தெரிவித்து வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியில், தமிழக முதல்வர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்த வருகை தந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற மக்கள் பிரதிநிதிகளை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம், அழைக்கவில்லை. அதிகாரிகளை மட்டும் வைத்து ஆய்வுக் கூட்டம் நடத்துவார்களோ என நினைத்தோம், ஆனால் அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை என மூன்று மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். அவர்களை அழைக்காமல் விட்டுவிட்டனர், இது தி.மு.க.விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்கிறோம். இது அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமா அல்லது அ.தி.மு.க. கூட்டமா எனத் தெரியவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கதக்கது. திட்டமிட்டு எங்களை ஒதுக்கிவிட்டு ஆய்வுக் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் மட்டும் கலந்துகொண்டது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

 

இது ஜனநாயக விரோத செயல். முதல்வரே இப்படி அடாவடித் தனத்தில் ஈடுபடலாமா? இதுபோன்று நடக்கிறது என்று தெரிந்திருந்தால் கூட்டம் நடத்தியிருக்கமுடியுமா? நாங்கள் மறியலும் கருப்புக் கொடி போராட்டமும் செய்திருப்போம். இது திருட்டுத்தனமாக தாலி கட்டிய செயலாகும். தற்போது எங்களை எல்லாம் அழைத்திருந்தால் குடிநீர்ப் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை ஆகியவற்றை சுட்டிகாட்டி மக்களின் குறைகளை எடுத்துக் கூறியிருப்போம்.

 

http://onelink.to/nknapp

 

பாலாற்றின் குறுக்கே சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் பாலம், வேலூர் சுற்றுசாலை, ஆம்பூர் சுற்றுசாலை உள்ளிட்டவற்றையெல்லாம் நாங்கள் எடுத்துக் கூறியிருப்போம். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அனைத்துக் கடிதங்களையும் ஹிந்தியில் எழுத வேண்டும் என துணை வேந்தர் வற்புறுத்துவதையும் அகரம் ஆறு தூர்வாரப்பட வேண்டுமெனவும் சுட்டிக் காட்டியிருப்போம். குறிப்பாக பொதுக் கணக்கு தணிக்கை குழுவின் தலைவரான என் தலைமையில் மாவட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநகராட்சியில் பலகுறைகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி அதனை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினோம். நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னவர் இதுவரையில் செய்யவில்லை.

 

இதையெல்லாம் முதல்வருக்கு எடுத்துக் கூறியிருப்போம். அப்படிச் செய்ய முடியாமல் எங்களைத் திட்டமிட்டு தவிர்க்க வைத்த முதல்வரைக் கண்டிக்கிறோம். சட்டமன்றத்தில் தி.மு.க. இப்பிரச்சணையை எழுப்பும் என்று கூறினார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.