இந்தியா முழுவதும் அனைத்து கட்ட தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் பெரும்பாலான மக்களவை தொகுதியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.தமிழகத்தில் திமுக முன்னிலை பெற்று வருகின்றது.இந்த நிலையில் திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.