Skip to main content

திமுக கவுன்சிலரின் தந்தை படுகொலை! 

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

DMK Counselor passed away

 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி, பாபநாசம் தாலுக்காவில் வசித்துவந்தவர் அப்துல் ராஜாக்கின் (63). இவர் அங்கு ஒரு கைலி கடை நடத்திவந்தார். இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் திருமணமாகி தனிதனியாக வசித்துவருகின்றனர். இவரது மகள் ஹதிஜா பிவி கும்பகோணம் மாநகராட்சியில் 3வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.

 

இந்நிலையில் இன்று காலை இவர் வெகு நேரமாகியும் கடை திறக்காததால், அவரது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரது மகன், தந்தையின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற அவர், தனது தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஐயன்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த தஞ்சை எஸ்.பி ரவளி பிரியா, பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, ஐயன்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் வந்தனர். 

 

அதன்பிறகு உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்தனர். அதன்பிறகு தடயவியல் நிபுணர்கள், கை ரேகை நிபுணர்களை வரவைத்து காவல்துறையினர் தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

திமுக கவுன்சிலரின் தந்தையின் மர்ம கொலை கும்பகோணம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்