Skip to main content

கார் கேட்டதால் வி.சி.க. துணை மேயருக்கு எதிராகத் தீர்மானம் போட்ட திமுக கவுன்சிலர்கள்?

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

DMK councillors who passed a resolution against the VCK  deputy mayor

 

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. திமுக கவுன்சிலர்கள், 3 தமிழக வாழ்வுரிமைக் கட்சி கவுன்சிலர்கள் உட்பட்ட 30 பேர், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் 3 பேர், சுயேட்சை 3 பேர், பாமக 1 கவுன்சிலர், பாஜக 1 கவுன்சிலர், காங்கிரஸ் 1 கவுன்சிலர் உள்ளனர். கடலூர் மாநகராட்சி மேயராகத் திமுகவை சேர்ந்த சுந்தரி ராஜாவும், துணை மேயராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தாமரைச்செல்வனும் இருந்து வருகிறார்கள்.

 

கடந்த ஆண்டு மாநகராட்சி மேயர் தேர்தலில் சுந்தரி ராஜா போட்டியிட்டு கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றார். இந்த நிலையில்  செப் 27 ஆம் தேதி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம், கடலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 21 பேர் ஒரு  புகார் மனு அளித்தனர்.  அந்த மனுவில், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்டியின்றி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் எங்கள் வார்டு பகுதிகளில் தொடர்ந்து துணை மேயர், வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதன் காரணமாக வருகின்ற மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

 

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, 21 திமுக கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவைப் பெற்றுக் கொண்டார். பின்னர் மேயர், திமுக தலைமை மற்றும் மாவட்டச் செயலாளர் எடுக்கும் முடிவு இறுதியானதாகும் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்து வருகிறது. தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒரே துணை மேயராக தாமரைச்செல்வன் மட்டும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கி புகார் மனு அளித்திருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கேட்டபோது, “நான் பதவியேற்று 1 ஆண்டுக்கு மேல் ஆகிறது. எனக்குத் தனியாக கார் வசதி உண்டு. ஆனால் மேயர் எனக்குக் கார் வழங்க மறுத்து வருகிறார். இதுகுறித்து நான் அரசு கார் கேட்டு ஆதங்கமாகப் பேசினேன். மேலும் துணை மேயருக்கு அனைத்து வார்டுகளிலும் நடக்கும் பணிகள் குறித்து கேட்க உரிமை உள்ளது. இந்த புரிதல் இல்லாமலும் நான் கார் கேட்டேன் என்ற காரணத்தால் இதுபோன்று செயல்படுகிறார்கள். விசிக சார்பில் உயர் பதவியில் இருந்தால் அரசு காரில் செல்லக்கூடாதா? இந்தக் கூட்டணிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி, குறிஞ்சிபாடி, கடலூர் தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக இருந்து சிறப்பாகப் பணியாற்றி வெற்றியடைய செய்தேன். இதுகுறித்து தமிழக முதல்வர், மாவட்ட அமைச்சர், எங்கள் தலைவர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.