Skip to main content

தி.மு.க. கூட்டணி 6 எம்.பி.க்கள் புது இயக்கம்...

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, பெட்ரோல் குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம்,உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட  விவசாய விளை நிலங்கள் வழியாக விவசாயிகளுக்கு எதிரான இந்த  திட்டங்களை கண்டித்தும் இவைகளை ரத்து செய்ய கோரியும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று நடைபெற்ற தமிழ் நாடு உழவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க செயல் திட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   

DMK coalition 6 MPs  New Movement...


இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் விரைவில் மத்திய அரசு ரத்து செய்ய போகிறது" என திமுக துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் எச்சரிக்கை விடுத்தார். தமிழகத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதை தடுத்தல் எரிவாயு கெயில் குழாய் பாதிப்பு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்தல், ஹைட்ரோகார்பன் திட்டம், எட்டுவழி சாலை போன்ற விவசாயத்தை அழிக்கும் மத்திய, மாநில அரசுகளின் அராஜகத்தை கண்டித்து விரிவாக பேசினார் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி. 

DMK coalition 6 MPs  New Movement...


இதில் கொங்கு மண்டல பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.பி.ஐ. திருப்பூர் - சுப்பராயன், கொ.ம.தே.க. நாமக்கல் - சின்ராஜ், தி.மு.க. பொள்ளாச்சி - சண்முகசுந்தரம், காங்கிரஸ் கரூர் - ஜோதிமணி சி.பி.எம்.கோவை, - P.R.நடராஜன் ஆகிய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசும் போது,

கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு பெட்ரோல் குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை கண்டித்தும் ரத்து செய்ய கோரியும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தபடும் தேதி பிறகு அறிவிக்கப்படும் எனவும் பாண்டியாறு புன்னம் புழா திட்டம், ஆழியாறு ஆனைமலையாறு திட்டம், அத்தி கடவு அவனாசி திட்டம் போன்ற பாசன திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என தெரிவித்தார்.  

 

DMK coalition 6 MPs  New Movement...


கூட்டத்தில் திமுக துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உரையாற்றும் போது, ஜல்லிகட்டு போராட்டத்தின் போதும் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டதுபோல் இளைஞர்களை நமது பகுதியில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும்" என்றார்.          

விவசாயத்தை அழிக்கும் மத்திய மாநில அரசுகளின் அராஜகத்தை கண்டித்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். ம.தி.மு.க., கொ.ம.தே.க, என 6 எம்.பி.க்கள் இணைந்து தமிழ்நாடு உழவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் என்ற புது அமைப்பை தொடங்கி போராட்ட களத்தில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.