Skip to main content

தி.மு.க. முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்!

Published on 26/01/2020 | Edited on 26/01/2020

திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், "திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு எம்.பி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருவதால், அவருக்கு பதிலாக திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்". 

 DMK Appointment of KN Nehru as Chief Secretary


திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு, ஏறத்தாழ சுமார் 30 ஆண்டுகள் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்துள்ளார், மேலும் அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களையும் திமுக காப்பாற்றியது.

 DMK Appointment of KN Nehru as Chief Secretary


இதனால் நேருவுக்கு கட்சியில் உயர் பதவி வழங்கப்படலாம் என்ற செய்தி வெளியான நிலையில், திமுக தலைமை கழகம் அவருக்கு திமுகவின் முதன்மை செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்பை வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், இன்று (01-04-24) காலை 11.30 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேப்பேரி ரித்தர்டன் சாலையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை பார்வையிட்டு பூத் ஸ்லிப் வழங்கினார்.

Next Story

நிவாரணத் தொகை வழங்கும் பணி; அரசு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர்  அறிவுரை

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
The work of granting relief; Chief Secretary Advice to Government Officers

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை பருவத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரு தினங்களில் பெய்த அதிகனமழை காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதிப்பின் அடிப்படையில் நிவாரணத் தொகையாக 6 லட்சத்து 63 ஆயிரத்து 760 குடும்பங்களுக்கு, குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசி வழங்கவும், 14 லட்சத்து 31 ஆயிரத்து 164 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு ஆணைகள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த 4 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் ஆணையாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (28.12.2023) முன்னேற்பாடுகள் கூட்டம் நடத்தி இப்பணியினை சிறப்புடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.

இப்பணியில் குறைபாடுகள் ஏதுமின்றி உரிய தேதிகளில் கூட்ட நெரிசல் இன்றி, அட்டைதாரர்கள் நிவாரணத் தொகை பெறும் வகையில் சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளும் வண்ணம், 26.12.2023 முதல் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து, அட்டைதாரரின் வீடுகளில் நேரடியாக டோக்கன்கள் வழங்கப்பட்டன. 29.12.2023 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் அட்டைதாரர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் குறித்த நேரத்தில் குடும்ப அட்டையுடன் நியாய விலைக் கடைகளுக்கு வருகை தந்து அவர்களுக்குரிய நிவாரண உதவிகளைப் பெற்றுச் செல்லலாம்.

இந்த நிவாரணத் தொகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில் அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிட ஏதுவாகத் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 93424 71314, 97865 66111 எண்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 94864 54714, 1077 எண்களிலும், தென்காசி மாவட்டத்திற்கு 04633-290548 எண்ணிலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 04652-231077 எண்ணிலும், கட்டுப்பாட்டு அறைகள் 26.12.2023 முதல் செயல்பட்டு வருகின்றன.

மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலகத்தில் 044-28592828 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறை அலுவலகப் பணி நேரத்தில் செயல்படும். பொதுமக்களுக்கு வெள்ள துயர் துடைக்கும் நோக்குடன் வழங்கப்படும் நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் நிலையில், பொதுமக்கள் இப்பணிக்கு போதுமான ஒத்துழைப்பு நல்கி நிவாரணம் பெற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. என அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.