Skip to main content

மக்களவை தேர்தலில் மூன்று பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளித்த திமுக , அதிமுக கட்சிகள்!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 37 மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற்றது. இந்த  தொகுதிகளில்

 திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர் : வி. சத்யபாமா  , 
திருவண்ணாமலை மக்களவை தொகுதி உறுப்பினர் : ஆர். வனரோஜா ,
தென்காசி மக்களவை தொகுதி உறுப்பினர் : எம்.  வசந்தி 
காஞ்சிபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர்  : கே. மரகதம்

உள்ளிட்ட நான்கு பெண்கள் அதிமுக மக்களவை உறுப்பினர்களாக தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

kanimozhi


2019 ஆம் ஆண்டுக்கான  மக்களவை தேர்தல் தேதியை சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் 17.03.2019 அன்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

 

இதில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தலா 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதனை தொடர்ந்து வேட்பாளர்கள்  விவரங்களை நாம் ஆராய்ந்ததில் திமுக சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழிக்கும், தென் சென்னை மக்களவை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஒரே பெண் வேட்பாளர் மரகதம் குமரவேல். காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மீண்டும் அவருக்கு போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. 
 

thamilachi thangapandiyanmaragatham



கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவில் 4 பெண்கள் போட்டியிட ஜெயலலிதா  வாய்ப்பளித்தார். 
கலைஞர் மற்றும் ஜெயலலிதா உட்பட இரு தலைவர்கள் இருந்திருந்தால் வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருந்திருக்கும்? தற்போது உள்ள அதிமுக மற்றும் திமுக  தலைவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்று தமிழக மக்கள் உற்று நோக்குக்கின்றனர். மேலும் இரு கட்சிகளும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. அதேபோல் பெண்களுக்கு மக்களவை தொகுதியில் 10% இட ஒதுக்கீடு கூட  தமிழக அரசியல் கட்சிகள் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ் , சேலம்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார்.