Skip to main content

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவிடமிருந்து பறித்த திமுக!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இதற்கான தேர்தல் தேதியை நேற்று அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன் படி வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவைத்தாக்கல் செய்ய ஜூலை 8 ஆம் தேதி கடைசி நாள் என்றும், ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது. தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

MK STALIN

 

 

பதவிக்காலம் நிறைவடைய உள்ள உறுப்பினர்களின் விவரங்களை பார்க்கலாம். 

1. மைத்ரேயன் ( அதிமுக ).
2. லட்சுமணன் (அதிமுக).
3. ரத்தினவேல் ( அதிமுக ).
4. டி. ராஜா ( இடதுசாரி ).
5. அர்ஜூனன் ( அதிமுக ).
6. கனிமொழி ( திமுக ).

இதில் நான்கு உறுப்பினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள். முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இடதுசாரி கட்சிகளின் ஒருவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி வழங்குவது வழக்கம். அதன் படி இடதுசாரி கட்சியின் டி.ராஜாவிற்கு வழங்கியிருந்தார். இவருடன் சேர்த்தால் அதிமுகவில் ஐந்து உறுப்பினர்கள் ஆகும். அதே போல் திமுக சார்பில் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு முதன் முறையாக சென்றார் கனிமொழி.

 

AIADMK MPS

 

 

ஆனால் தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அதிமுகவிடம் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறித்தது திமுக. தற்போதைய நிலையில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் திமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும், அதிமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மொத்தம் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆகும். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறையும், திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கும். இந்த இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் பட்சத்தில், மேலே குறிப்பிட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.