dmdk vijayakanth statement about opening of liquor shops issue

தமிழக அரசு உத்தரவுப்படி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் இன்று டாஸ்மாக் கடைகள், பல நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. கரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், "தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மது நமக்குத் தேவைதானா? யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில் அரசு தாமாக முன்வந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதன் அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

மேலும் ஒவ்வொரு குடும்பத்தின் வருவாயை கருத்தில் கொள்ளாமல், அரசு தனது வருவாயை மட்டும் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளாய் திறந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மதுபிரியர்கள் குடும்பத்தில் கரோனா தொற்று அதிகரிக்கவும், குடும்ப வன்முறைகள் பெருகவும் டாஸ்மாக் கடைகள், காரணமாக அமைந்துவிடும். கடந்த 43 நாட்களாக ஊரடங்கை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பின் மூலம் அவப்பெயரே கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Advertisment