தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது, விஜயகாந்துக்கு லேசான கரோனா அறிகுறி இருந்ததாகவும், தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக கூறியுள்ளது.