"தொண்டர்களே எனது முதல் தெய்வம்"- விஜயகாந்த் பேச்சு!

சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்களுடன் இணைந்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.

dmdk party pongal festival celebration in chennai vijayakanth speech

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய விஜயகாந்த், தமக்காகப் பிரார்த்தனை மேற்கொள்ளும் தொண்டர்கள் தான் தமது முதல் கடவுள் என்றும், விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டு வருவேன் என்றும் உருக்கமாக தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் விஜயகாந்த்தெரிவித்துக் கொண்டார்.

Chennai dmdk party pongal celebraion vijayakanth speech
இதையும் படியுங்கள்
Subscribe