தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோனை கூட்டம் தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (13.12.2020), காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட கழக செயலாளர் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.' இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் கட்சியின் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.