Skip to main content

விஜயகாந்த் உடல் நிலை குறித்து எல்.கே.சுதிஷ் பேட்டி  

Published on 27/09/2020 | Edited on 28/09/2020
dmdk L.K sudeesh pressmeet

 

கரோனாவல் பாதிக்கப்பட்டு தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரோனா தொற்று மிக குறைந்த அளவில் தொற்றியுள்ளதால் விஜயகாந்த் நலமாக உள்ளார் என மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தத்துக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை புரிந்த விஜயகாந்த் மைத்துனரும், தேமுதிகவின் மாநில இளைஞரணி செயலாளருமான சுதிஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது. செப்டம்பர் 28ந்தேதி விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என குறிப்பிட்டார். இந்த தகவல் அங்கு கூடியிருந்த விஜயகாந்த் கட்சி தொண்டர்களை மகிழ்ச்சி கொள்ளவைத்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அ.தி.மு.க - தே.மு.தி.க - பா.ம.க கூட்டணி உறுதி?

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
ADMK and DMDKand  PMK alliance confirmed?

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக தொகுதி பங்கீடுகளை முடிவு செய்து, வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறது. அதே நேரம் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதில், அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் சி.வி. சண்முகம் கூட்டணி குறித்து இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இது குறித்து இரு கட்சிகள் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. 

அதே வேளையில், அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16ஆம் தேதி 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க கூட்டணியில் 3 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது.  இது போன்று, அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு  மாநிலங்களவை இடத்துக்கும் பா.ம.க விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இறுதி முடிவு எட்டப்பட்டு, அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ம.க இடையே மார்ச் 20ஆம் தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு, அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர், பா.ம.க தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.