Diwali Train Ticket Booking; Empty within 5 minutes of start

தீபாவளிக்கான சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் ஐந்து நிமிடத்திலேயே டிக்கெட்டுகள் காலியானது.

Advertisment

இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சிறப்பு டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. டிக்கெட் விற்பனையானது தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே முழுமையாக விற்று தீர்த்தது. இணையதளம் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்ய காத்திருந்தவர் பெரும்பாலும் காத்திருப்பு பட்டியலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் வழியாக பயணிகள் தீபாவளி பயணத்திற்கு டிக்கெட்டுகளை வாங்கினர். குறிப்பாக கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் ஐந்து நிமிடத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் காலியானது.

Advertisment