Advertisment

தீபாவளி வசூல்... லஞ்ச ஒழிப்பு துறை சோதனை... கணக்கில் வராத பணம் பறிமுதல்

Advertisment

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தீபாவளி பண்டிகையொட்டி, அங்கு பணியாற்றும் பலர் வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார்கள் சென்றது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன் தலைமையில் திடீரென கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் வந்தனர்.

அந்த அலுவலகத்தின் அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு 8 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம் ரூபாய் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றியதாகவும், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

diwali kilakarai Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe