Advertisment

தடையை மீறி பட்டாசு வெடித்த 9பேர் மீது வழக்குப்பதிவு...

diwali

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணிமுதல் 8 மணிவரை என 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழக அரசு அந்த இரண்டு மணிநேரத்தை இவ்வாறு ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது. இன்று தீபாவளி காலை விதியைமீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 27பேரை போலிஸார் பிடித்தனர். அவர்களில் 6 பேர் சிறுவர்கள். மற்றவர்கள் அவர்களது பெற்றோர்கள் இவர்களில் சிலபேர்களை முறைப்படி பட்டாசு வெடிக்கவேண்டுமென்று போலிஸார் அறிவுறுத்தி அனுப்பிவிட்டனர். இதைத்தவிர சேரன்மகாதேவியில் 6பேர் மீதும், தென்காசியில் 3 பேர் மீதும் தொடர்புடைய காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களின்மீது பிரிவு 188 தடையாணையை மீறியதாகவும், 195ன் படி அரசாணையை மீறியதாகவும், 291ன்படி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் மூன்று பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

arrest crackers diwali
இதையும் படியுங்கள்
Subscribe