Skip to main content

கவுன்சிலர்களுக்கு தீபாவளி கவனிப்பு - விருதுநகர் எம்.எல்.ஏ. தாராளம்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

Diwali care for councilors!-Vridhunagar MLA Generous!

 

“அதிமுக ஆட்சி மாதிரி வருமா? அப்பல்லாம் முனிசிபாலிட்டி கவுன்சிலர்களுக்கு, கான்ட்ராக்டர்களோட பங்கா ஒவ்வொரு மாசமும் பணக்கவர் கொடுப்பாங்க. திமுக ஆட்சிக்கு வந்துச்சு...  இப்ப..  விருதுநகர் எம்.எல்.ஏ.வும் முனிசிபல் சேர்மனும் ரெண்டு பேருமே திமுக.. ஆனா.. கவுன்சிலர்கள் கைக்கு கவர் வந்ததே இல்ல. இப்ப பாருங்க.. தீபாவளி பணம்னு சொல்லி கவுன்சிலர் தலைகளை எண்ணி, சேர்மன் மாதவன் மூலமா ரூ.25000 கொடுத்திருக்காங்க. சம்பாதிக்கிறத எல்லாம் மொத்தமா அவங்களே வச்சிக்கிட்டு.. ஒப்புக்கு கொடுக்கிறாங்க. இந்த சொற்பத் தொகை எப்படி சரியா வரும்?” என விருதுநகர் நகர்மன்றத் தலைவர் தனலட்சுமியின் கணவர் துளசிராமன் அழைப்பின் பேரில், கட்சிகளைக் கடந்த பாசத்துடன் கொரியர் அலுவலகம் ஒன்றில் கவுன்சிலர்கள் ஒன்றுகூடி விவாதித்து அங்கலாய்த்தனர்.

 

ஆளும் கட்சிக்காரரான  துளசிராமன், தோழமைக் கட்சி கவுன்சிலர்களோடு சேர்ந்து நடத்திய இந்த ரகசியக் கூட்டத்தின் பின்னணியில் ‘சதி’ எதுவும் இருக்குமோ என்று சந்தேகப்பட்ட சேர்மன் மாதவன் விஷயத்தை விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் கூற, பலமான கவனிப்புடன் அதிருப்தி கவுன்சிலர்களை  ஆளுக்கொரு திசையாகப் பிரித்துவிட்டனர்.  ஆனாலும், மொத்தம் உள்ள 36 கவுன்சிலர்களில் திமுக - 2, காங்கிரஸ் – 2, அதிமுக – 3, சிபிஎம் – 1, சுயேச்சை -1 என 9 கவுன்சிலர்கள் “உங்க பணமே வேண்டாம்..” என்று ஒதுங்கிக்கொண்டதும் நடந்திருக்கிறது.

 

Diwali care for councilors!-Vridhunagar MLA Generous!

 

ரகசியக் கூட்டம் நடத்தியதன் பலனாக, வைஸ்-சேர்மன் தனலட்சுமியின் கணவர் துளசிராமனுக்கு ரூ.1 லட்சம் கிடைத்திருக்கிறது. புதிதாக சீட் கிடைத்து ஆளும்கட்சி கவுன்சிலர்கள் ஆனவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. திமுக எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனின் கவனிப்பை நிராகரித்த 20-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செல்வரத்னா சார்பில் நம்மிடம் பேசிய  அவருடைய கணவர் திலக் “ஆமாங்க.. துளசிராமன் கூப்பிட்டாருன்னு எல்லாரும் போய் பேசினாங்க. நானும் போயிருந்தேன். அங்கிருந்து போயி எம்.எல்.ஏ.வை பார்த்தோம். திமுக ஆளுங்க அப்படியே தனித்தனியா போயிட்டாங்க. காங்கிரஸ் கவுன்சிலர்களும் எம்.எல்.ஏ.வை பார்த்துட்டு வெளிய வந்துட்டாங்க. காங்கிரஸ் கவுன்சிலர்கள் மொதல்ல பணம் வாங்கல. பணம் வாங்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. நான் வாங்கல” என்றார்.

 

Diwali care for councilors!-Vridhunagar MLA Generous!

 

வைஸ்-சேர்மன் தனலட்சுமியின் கணவர் துளசிராமனிடம் பேசினோம். “எல்லா கவுன்சிலர்களும் ஒற்றுமையா இருந்து நல்லது செய்யணும்கிறது என்னோட ஆசை. வார்டுல ஏதாச்சும் நல்லது நடக்கணும்னு பொதுமக்கள் எதிர்பார்க்கிறாங்க. எல்லாரும் நல்லா இருக்கணும்னு எம்.எல்.ஏ. நினைப்பாரு. அதுக்காக அவரு கூப்பிட்டு பேசும்போது..  ஏரியாக்கள்ல வேலை நடக்கணும். அதிகாரிகள் நல்லபடியா செஞ்சு கொடுக்கணும்னு.. நாங்க எங்களோட கருத்த சொன்னோம்.” என்றவரிடம்  ‘உங்களுக்கு மட்டும் தீபாவளி கவனிப்பு ரூ.1 லட்சமாமே?’ என்று இடைமறித்தபோது  “நாங்கள்லாம்..  எங்களுக்கு  ரூபா வேணாம்னுதான் சொன்னோம். பணத்த பெரிசா நினைக்ககூடியவர்கள் நாங்க கிடையாது” என்று ஒரே போடாகப் போட்டார்.  

 

Diwali care for councilors!-Vridhunagar MLA Generous!

 

விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவனை தொடர்புகொண்டோம். “உங்களுக்கு யாரோ தப்பான தகவல் கொடுத்திருக்காங்க. மற்ற விபரம் எதுவும் எனக்கு தெரியாது. நீங்க ஏதோ சொல்றீங்க.. நான் கேட்டுக்கிறேன். இல்லாதத மிகைப்படுத்தி சொல்லிருக்காங்க. இத பெருசாக்கணும்னு நினைக்கிறாங்க.” என்றவர்   “இங்கே நகராட்சி இன்ஜினியர் மணி சரியில்ல. அவர் விருதுநகருக்கு கிடைத்த சாபக்கேடு” என்று  ‘டிராக்’ மாறி பேசினார்.

 

Diwali care for councilors!-Vridhunagar MLA Generous!

 

விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் இருந்து விளக்கத்தைப் பெற அவரது கைபேசி எண்ணில் (984XXXX844) தொடர்புகொண்டபோது நம்மைத் தவிர்த்தார். குறுந்தகவல் அனுப்பியும் பதில் இல்லை. விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு தீபாவளி கவனிப்பாக பெரும் தொகை கொடுத்தது குறித்து விளக்கம் அளிக்க அவர் முன்வந்தால் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.

 

விருதுநகரில் மட்டுமல்ல.. பெரும்பாலான நகராட்சிகளில் சத்தமில்லாமல்  ‘தீபாவளி பஞ்சாயத்துகள்’ நடந்திருக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.