Skip to main content

''தீபாவளி என்பது பெளத்த விஞ்ஞான விழா'' -ஆம்ஸ்ட்ராங் பேச்சு

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Diwali Buddhist Science Festival - Armstrong speech

 

தீபாவளி பண்டிகைக்கு காரணமாக சொல்லப்படும் கதைகள் ஏராளம். அதில் வால்மீகி ராமாயணத்தில் கொடியவனான ராவணனை அழித்து தன்னுடைய வனவாசம் முடிந்து சீதையுடன் அயோத்திக்கு ராமர் திரும்புவதை விளக்கேற்றிக் கொண்டாடியதாகவும், சிவபெருமான் அசுரனின் தலையில் கைவைக்க வெடித்து சிதறியதாகவும் என இப்படி எண்ணற்ற கதைகளை சொன்னாலும் தீபாவளிக்கு என்று ஒரு வரலாற்று உண்மை இருப்பதாக தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் பேசியுள்ளார்.

 

தீபாவளி பண்டிகை குறித்து அவர் பேசியுள்ளதாவது, ''அக்காலத்தில் பெளத்த மடங்களில் தங்கியிருக்கும் அறவணடிகள் தங்களின் ஓய்வு காலங்களில் நேரத்தை வீணாக்காமல் பழங்களின் தன்மைகளையும், செடிகளின் தன்மைகளையும் மற்றும் உலோகங்களின் தன்மைகளையும் ஆராய்ந்து அதன் குணங்களையும் பயன்களையும் உறுதிசெய்த பின் அதை மன்னரிடத்தில் கூறி அவரின் ஒப்புதலுடன் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அப்படி புதியதாய் ஒரு பொருளை கண்டுபிடிக்கும் நாளை புத்தாடை உடுத்தி மற்றவர்களுக்கு ஈகை பண்புடன் உணவு பதார்த்தங்களை செய்து கொடுத்து கொண்டாடியதுதான் பின்னர் நாட்களில் பண்டிகையாக கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவில் பள்ளி என்னும் நாட்டை பகுவன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரசனிடம் சென்ற அறவணடிகள் எள் எனும் தானியத்தின் மூலம் தயாரிக்கப்பட்டதை எண்ணையை கொடுத்து இது கபாலரோகம், சோமரோகம், மேகநோய், மலச்சிக்கல், எலும்புருக்கி, ஈளை ஆகிய நோய்களுக்கு இது மருந்தாக அமையும் மேலும்  சுவையான பல பலகாரங்கள் தயாரிக்க பயன்படும் என எடுத்துரைத்தனர்.

 

அதனை மன்னன் பகுவன் ஆய்வு செய்து உறுதிசெய்த பின் நாட்டில் அதிகமாக எள்ளை விளைவித்து நாட்டு மக்களை வரவழைத்து கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய்யை கொடுத்து தலையில் தேய்க்கச் சொல்லியதோடு அந்நாட்டில் ஓடும் தீபவதி நதியில் நீராடச் செய்தான். மேலும் அந்த எள் நெய்யில் (நல்லெண்ணையில்) பலகாரங்கள் செய்து அனைவருக்கும் கொடுத்து மக்களை மகிழ்வித்தான். தீபவதி நதியில் நீராடிய அந்த நாளை மறவாமல் மக்கள் ஆண்டுதோறும் புத்தாடை உடுத்தி மற்றவர்களுக்கு ஈகை தானம் செய்து வழக்கம் போல் எள் எண்ணெயில் பலகாரங்கள் சமைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். தீபவதி பண்டிகை காலப்போக்கில் மருவி தீபாவளி பண்டிகையானது.இந்த வரலாற்றை தாமாக சொல்லவில்லை. உறுதியான வரலாற்று தகவலை அயோத்திதாச பண்டிதர் பின்வரும் பெருந்திரட்டு பாடல் மூலம் உறுதி செய்கிறார்.

 

“பள்ளியம்பதிலூர்ந்த பகு வனார் கிழவகாலந் தெள்ளியலுழவிலூறுஞ் சேர்புநல் புஞ்சைவாவி எள்ளக வெண்ணெயாய்ந்த விடயமற்றவர்குறிப்ப வெள்ளியல்மற்றாகார மற்சிர மகிழ்வென்றாங்கே சிர முருவெள் நெய்மற்றுந் திரளொடு செந்நெலீய்ந்து கரமுகிலேந்திகங்கைக் கரை தீபவதியைநாடித் துரமுறத் தோய்ந்து நீரிற்று வைந்துமெய்யக நறப்ப பரவருமசதி மற்றும் பாயிலுமகலுமென்றான்” பெளத்தத்தின் வழிநின்று அயோத்திதாசர் கூறும் இச்செய்தி மூடத்தனம் ஏதுமின்றி பகுத்தறிவுக்கு உட்பட்டதாகும் விஞ்ஞான பூர்வமாகவும் உள்ளது.

 

பெளத்தத்தை பின்பற்றும் அண்டைய நாடுகளிலும் இதுபோன்ற இருப்பது இத்தகவலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. முன்னோர் வழி நின்று கொண்டாடி மகிழ்வோம் தீபாவளி திருநாளை'' என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் தேதியில் மாற்றம்; வேட்பாளர் உயிரிழப்பால் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தலின் போது நடைபெற இருந்தது. அந்த தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில், பிடல் தொகுதி வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அசோக் பலவி வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி நேற்று முன் தினம் (09-04-24) மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்துவிட்டார். இதனால், ஏப்ரல் 26ஆம் தேதி அன்று பிடல் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தலின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளர் உயிரிழக்கும் வகையில், அந்தத் தொகுதிக்கு வேறு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவிக்க அவகாசம் கொடுக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52ன்படி சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படும். அந்த வகையில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி கடந்த 9ஆம் தேதி உயிரிழந்த நிலையில், பிடல் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இந்தத் தொகுதிக்கான வாக்கு பதிவானது, மூன்றாம் கட்ட தேர்தலின் போது மே 7ஆம் தேதி நடைபெறும்’ என்று அறிவித்துள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.