Skip to main content

தரமற்ற பலகாரங்கள் தயாரித்தால் 5 லட்சம் ரூபாய் அபராதம்

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

Diwali is approaching: 5 lakh rupees fine for making substandard Balakaras! Food Safety Alert!!

 

தீபாவளி பண்டிகையையொட்டி தயாரிக்கப்படும் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் தரமற்றதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் எச்சரித்துள்ளார்.

 

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு  உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம், சேலத்தில் திங்கள்கிழமை (அக். 10) நடந்தது.

 

மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது, "தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் விற்பனை அதிகளவில் இருக்கும். அனைத்து இனிப்பு விற்பனை கடைகள், தயாரிப்புக் கூடங்களை கண்காணித்து வருகிறோம்.  

 

இனிப்பு, காரங்களை கிப்ட் பாக்ஸ்களில் வழங்கப்படும்போது, அந்த பெட்டியின் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் அச்சிட வேண்டும்.  

 

உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் இல்லாமல் பலகார தயாரிப்பில் யாரும் ஈடுபடக் கூடாது. நுகர்வோரை கவர்வதற்காக பலகாரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தக் கூடாது.  

 

தரமற்ற பலகாரங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பண்டிகையையொட்டி தயாரிக்கப்படும் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்களின் தரத்தைக் கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. தரமற்ற உணவுப்பொருள் தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.  

 

இந்த கூட்டத்தில், இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். நிறமூட்டிகளை எந்தளவிற்கு சேர்க்கப்பட வேண்டும், நச்சுத்தன்மை உள்ள பொருள்கள், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி விவரங்கள் மட்டுமின்றி லேபிளில் இடம்பெற வேண்டிய வேறு விவரங்கள் குறித்தும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.