Skip to main content

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க மாவட்ட வாரியாக தனிப்பிரிவு!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
court

 

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட வாரியாக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

உசிலம்பட்டியை சேர்ந்த விமலாதேவியும், திலீப்குமாரும் காதலித்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரது குடும்பத்திலும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விமலாதேவியை வத்தலகுண்டு பகுதியிலிருந்து மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். உசிலம்பட்டி பகுதி அரசியல்வாதிகளின் தலையீட்டில் விமலாதேவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் சில நாளில் எரிந்த நிலையில் விமலாதேவியின் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும், தனக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரியும் திலீப்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டும், திலீப்குமாருக்கு பாதுகாப்பு வழங்கவும் 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

மேலும், 
-உரிய முறையில் விசாரிக்காத காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். 
- ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களின் புகார்களை கவனிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் 
- அவர்களின் புகார்களை பெற 24 மணி நேர தொலைப்பேசி வசதியை ஏற்படுத்த வேண்டும் 
- புகார்களை இணைக்கும் வகையில் காவல்துறையின் சி.சி.ட்டி.என்.எஸ். (CCTNS) வசதியுடன் இணைக்கப்பட வேண்டும் 
- காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களை மாவட்ட வாரியான பிரிவுகள் கண்காணிக்க வேண்டும் 
- தம்பதிகளை பாதுகாப்பது, பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பது என நின்று விடாமல், கலந்தாய்வும் வழங்க வேண்டும் 
- ஆணவக்கொலைகளை களைந்தெடுக்கும் வண்ணம் போதிய நிதி ஒதுக்கி, ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு போதிய இருப்பிட வசதி ஏற்படுத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும் 
- இதுபோன்ற செயல்பாடுகளில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தவறினால்  சம்பந்தப்பட்ட மாவட்ட குழுக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் 
-  தனிப்பிரிவு ஏற்படுத்தும் பணியை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

 

இந்த உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்கு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முயற்சிகள் முன்னணியின் மாநில செயலாளர் 2017ஆம் ஆண்டு தமிழக உள்துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்துவரும் நிலையில் உள்துறை செயலாளர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அந்த பதில் மனுவில் (1) அப்போதைய செக்காணூரனி காவல் ஆய்வாளர் சுகுமார், உசிலம்பட்டி உதவி ஆய்வாளர் ராணி, வத்தலகுண்டு ஆய்வாளர் வினோஜ், துணை ஆய்வாளர் ஆனந்தி ஆகியோரின் ஊதிய உயர்வை மூன்றாண்டுகளுக்கு நிறுத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

(2) மேலும் புகார்களை பெறுவதற்கு அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் காவல்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள்  அமைக்கபட்டுள்ளது .

(3) அனைத்து மாவட்டங்கள், நகரங்களில் 24 மணி நேர அடிப்படையில் 1091, 1077 உள்ளிட்ட உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

(4) இணையதளம் மற்றும் செயலி மூலம் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்ப அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்வது குறித்து காவல்துறை முடிவெடுப்பார்கள். 

(5) மாவட்ட வாரியான பிரிவுகள் கண்காணிப்பது

(6) தம்பதி, பெற்றோருக்கு கலந்தாய்வு வழங்குவது 
(7) தம்பதிகளுக்கு இருப்பிட வசதி ஏற்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு 10.02.2017ல் டிஜிபி அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

(8) சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் மூலமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.

(9) தம்பதிகளை பாதுகாக்க தவறிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்றியுள்ளதால் தமிழக அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிபு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.