Skip to main content

'விருத்தாசலத்தை மாவட்டமாக பிரித்துக்கொடு' -தமிழக முதல்வருக்கு  அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

'Divide the Vridthachalam into districts' - a protest to send a postcard to the Chief Minister of Tamil Nadu!

 

கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தைத் தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி, 'விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம்' சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் தமிழக முதல்வருக்கு தொடர் அஞ்சலட்டை அனுப்புவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 04-ஆம் தேதி விருத்தாசலம் தலைமை தபால் நிலையத்தின் முன்பு தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக விருத்தாசலம் வட்டம் மங்கலம்பேட்டை அஞ்சலகத்தில் விருத்தாசலம் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி அஞ்சலட்டை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

 

மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் தலைமையில்  கோரிக்கையை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பிய விழிப்புணர்வு இயக்கத்தினர் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கதிர்காமன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்டீபன், மக்கள் நீதி மய்யம் நிர்வாகி வேங்கடகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சி மாநில இணைப் பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.இக்பால், பா.ம.க நகர செயலாளர் ராமகிருஷ்ணன்  உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது அவர்கள், "கடந்த 20 வருடமாக விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருவதால், தமிழக அரசுக்கு நினைவூட்டும் வகையில் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும்  அரசியல் கட்சிகள் சார்பில் தமிழக முதல்வருக்கு  நூற்றுக்கணக்கான அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர்ச்சியாக பல கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது" என தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.