Skip to main content

திசைமாறும் கடத்தல் டெக்னிக்... கூரியர் வாகனத்தில் 350 கிலோ கஞ்சா

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

லாரிகள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள், டூவீலர் என்று சமயங்களில் கிடைத்த வாகனங்களில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது உளவாளிகளின் தகவலால் போலீசார் வசம் சிக்கிவிடுகின்றன. ஆனாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டங்களும், கடத்தல்களும் தலை கவிழ்ந்த மாதிரி தெரியவில்லை. தற்போது கடத்தல் புள்ளிகள் போலீசாரின் பார்வை பதியாதவகையில் தங்களின் கடத்தல் ரூட்டை டெக்னிக்கலாக மாற்றியுள்ளனர்.

 

நேற்றைய தினம் மாலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் சூரங்குடி போலீசார் வேம்பார் சோதனைச் சாவடியில்  வாகனச் சோதனையில் இருந்திருக்கின்றனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கூரியர் வாகனம் ஒன்று சோதனைச் சாவடியில் நிற்காமல் கிழக்கு கடற்கரை சாலை வழியே தூத்துக்குடி நோக்கிப் பறந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கூரியர் வாகனத்தை விடாமல் தொடர்ந்து 15 கி.மீ. தொலைவு விரட்டி சென்றிருக்கிறார்கள். அவர்களின் துரத்தலைக் கண்டு பீதியானவர்கள் குளத்தூரையடுத்த பல்லாங்குளம் காட்டுப் பகுதியின் முள்வேலி புதருக்குள் கூரியர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். பின் தொடர்ந்த போலீசார் கூரியர் வாகனத்தை சோதனையிட்டதில் 350 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்து அதனையும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

தகவலறிந்த எஸ்.பி.பாலாஜி சரவணன், ஏ.டி.எஸ்.பி.கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கஞ்சா கடத்தப்பட்ட கூரியர் வாகனத்தைப் பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூரங்குடி போலீசார் தப்பியோடியவர்களை தனிப்படை மூலம் தேடி வருகின்றனர். சிக்கிய கஞ்சாவின் இந்திய மதிப்பு 2 கோடி என்றாலும் இதன் சர்வதேச மதிப்பு 8 கோடி என்கிறார்கள். 24 மணி நேரத்திற்குள் குறையாது சரக்குகளை சப்ளை செய்கிற கூரியர் வாகனங்கள் இதுவரை சந்தேக வளையத்தில் இல்லை. தற்போதைய கடத்தல் மூலம் அவைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இலங்கைக்கு கடத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.