சசிகலாவின் தம்பியும் அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவருமான மன்னார்குடி திவாகரனின் மகன் ஜெய்ஆனந்திற்கும் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான பாஸ்கரனின் மகள் ஜெயாவிற்கும் திருமணம் மார்ச் 5-ஆம் தேதி மன்னார்குடி, சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் பண்ணை வீட்டில் விமரிசையாக நடந்தது. சசிகலாவின் உத்தரவின் பேரில் திவாகரனின் உறவினர்கள் பலர் அந்த திருமணத்திற்கு வராத நிலையில், நேற்றைய தினம் அவர்களின் வரவேற்பு நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி, கம்யூனிஸ்ட் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் வைரமுத்து, நக்கீரன் ஆசிரியர், நடிகர் பிரபு உள்ளிட்ட அரசியல், திரைத்துறை மற்றும் ஊடகத்துறை சார்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.