ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சசிகலாவின் உறவினர்கள், போயஸ் தோட்டத்தில் பணியாற்றியவர்கள், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது அவரை சந்தித்த முக்கிய அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் நீதிபதி ஆறுமுகசாமி இதுவரை 30-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடந்தியுள்ளார். ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரான சிவக்குமாரிடமும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரனை இன்று (3-ம் தேதி) நேரில் ஆஜராகச் சொல்லி விசாரணை ஆணையம் கடந்த 30-ம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்படி, திவாகரன் இன்று ஆஜராக வந்தார்.

Advertisment

படங்கள்; குமரேஷ்