தமிழகத்தில் ஈரோட்டை தொடர்ந்து தற்பொழுது நீலகிரியில் கரோனாவால்பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து, கரோனா இல்லாத மாவட்ட பட்டியலில் இணைந்துள்ளது. நீலகிரியில் கரோனவால்பாதிக்கப்பட்டிருந்த 9 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில்அங்குஅரசு அலுவலகங்கள் செயல்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கரோனா இல்லாத மாவட்ட பட்டியலில் கரூரும் இணைந்துள்ளது.கரூரில் இதுவரை மொத்தம் 42 பேருக்கு கரோனாபாதிப்பு இருந்த நிலையில் 41 பேர் ஏற்கனவே குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் 42 ஆவது நபராக இருந்த பெண்ஒருவரும்தற்போது குணமடைந்த நிலையில் தற்பொழுது கரூரும் கரோனாஇல்லாத மாவட்டமாக உள்ளது.