Skip to main content

நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுத்த வேண்டுகோள்...

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

District Collector's request for the best teacher award


அரசு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்துவரும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ஆசிரியர் தினத்தன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது தமிழக அரசு. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் நல்லாசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


அவர்களின் விவரம் தீர்த்தனகிரி பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, நெய்வேலி என்.எல்.சி பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தாமரை, கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அசோகன், காட்டுமன்னார்கோவில் பருவதராஜ, குருகுல பள்ளி ஆசிரியர் தர்மராஜன், கண்டமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர் அமுதா, எல்லப்பன் பேட்டை ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் திலகம், பணிக்கன் குப்பம் ஆர்.சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆண்டோனி ராஜா, இடைச்செருவாய் ஊராட்சி பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி, பத்திரக்கோட்டை ஊராட்சி பள்ளி தலைமையாசிரியர் நாகராசு, சேமக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர் வீரப்பன் மற்றும் புவனகிரி பாரதி மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர் பழனியப்பன் ஆகிய பதினோரு பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
 


நேற்று காலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகா முரி, விருது வழங்கினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி பேசும்போது, “விருது பெறும் ஆசிரியர்கள் இந்த விருதிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மேலும்  மேலும் சிறப்பாக பணியாற்றி மாணவ மாணவியர்களின் கல்வியை மேன்மை அடைய செய்ய வேண்டும். கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள நம் மாவட்டத்தை மாநில அளவில் 10 இடங்களுக்குள் கொண்டுவரும் வகையில் ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். விருது பெற்றவர்கள் மட்டுமல்ல, விருது பெற முடியாதவர்களும் இவர்களைப் போன்று விருது பெற்று பெருமை சேர்க்கும் வகையில் பிள்ளைகளின் கல்விக்காக தங்களை முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற முன்வரவேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்துப் பேசினார். 

 

நல்லாசிரியர் விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு பத்தாயிரம் ரூபாயை ஆட்சியர் கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில்  முருகுமாறன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயா செல்வராஜ் மோகன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

பொதுவாக நன்றாக திறமையாக முழு அர்ப்பணிப்புடன் தங்கள் பணியை செய்து வருபவர்களை பாராட்டும் வகையில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இது போன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று கடலூர் மாவட்டம். அதை கல்வியில்  மேம்படுத்தும் வகையில் சமீபகாலமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களைப் போன்றே அனைத்து ஆசிரியர்களும் கடும் முயற்சி செய்து அரசுப் பள்ளியில் சேரும் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து கல்வி பண்பாடு ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுத்து அவர்களை அனைத்திலும் சிறந்த திறமைசாலிகளாக வெளிக்கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் அரசுப்பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு படையெடுத்து வருவார்கள், அந்த நிலை விரைவில் வரும் என்கிறார்கள் அரசுப் பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்கள் பலர். அதேநேரத்தில் தமிழக அரசும் அரசுப் பள்ளிகளில் உள்ள குறைபாடுகள் ஆசிரியர் பற்றாக்குறை போன்றவைகளை முழுவதும் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறார்கள். ஆசிரியர் பெருமக்கள் வரும் காலம் அரசுப்பள்ளிகளில் வளமான கல்வி காலமாக நிச்சயம் மாறும் என்கிறார்கள் ஆசிரியப் பெருமக்கள். ஆசிரியர் பெருமக்களுக்கு நக்கீரன் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.