சென்னையில் நேற்று (01 பிப்.)காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படிஅலுவலக வளாகத்தில்50 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட, பெட்ரோலில் இயங்கக் கூடிய ரூ.65,000/- மதிப்புள்ள50 ஸ்கூட்டர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சீத்தாலட்சுமி இ.ஆ.ப.நேரில் வழங்கினார்.இதில்மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். க.சுப்பிரமணி மற்றும் முடநீக்கியல் வல்லுனர் கதிர்வேல் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.