Skip to main content

ஆத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்! உயர்நீதிமன்ற நீதியரசர் வி.எம்.வேலுமணி திறந்துவைத்தார்!!

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் திறப்புவிழா நடைபெற்றது. 

இந்த விழாவிற்கு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.கே.ஜமுனா தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஜி.சரத்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.மகாதேவன் மற்றும் வி.எம்.வேலுமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். ஆத்தூரில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி.எம்.வேலுமணி துவக்கிவைத்தார். 

 

 District Attorney and Criminal Court in Attur! High Court Justice VMVelumani inaugurated !!

 

சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் குத்துவிளக்கு ஏற்றி நீதிமன்ற பணிகளை துவக்கிவைத்தார். முன்னதாக திறப்பு விழாவிற்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.மகாதேவன் மற்றும் வி.எம்.வேலுமணி அவர்களுக்கு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.கே.ஜமுனா, திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, கோட்டாட்சியர் உஷா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சக்திவேல், ஆத்தூர் தாசில்தார் பிரபா ஆகியோர் நீதியரசர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். 

ஆத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் திறப்புவிழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எம்.காமாட்சி, துணை அமைப்பாளர்கள் வி.மூர்த்தி, சூசைஆல்பர்ட், சண்முகசுந்தரம், புரவலர் சுரேஷ்குமார் மற்றும் நகர அமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். 

நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் தண்டபாணி, மார்க்கிரேட்மேரி, ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் எம்.மனோகரன், செயலாளர் வி.கிருஷ்ணன், ஆத்தூர் ஊராட்சி செயலாளர் மணவாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.